இவர்கள் அனைவரும் ஒரே தெருவில் வசிக்கும் அயலவர்கள்.
ஒரே காலப்பகுதியில் கர்ப்பிணிகளாக இருந்தவர்கள். ஏழுவார கால இடைவெளியில் ஒரே ஆஸ்பத்திரியில் பிறந்தவை தான் இந்தக் குழந்தைகள். அனைத்தும். இப்போது இதேகால இடை வெளியில் தமது முதலாவது பிறந்தநாளுக்குத் தயாராகி வருகின்றனர்..
இவர்களுள் முதலாவது குழந்தையைப் பிரசவித்தவர் 34 வயதான நீலா எட்வர்ட் என்ற ஆசிரியை. இவருக்குப் பிறந்தது இரட்டைப் பெண் குழந்தைகள்.
தான் கர்ப்பிணியாக இருந்த போது அதே தெருவில் இன்னும் ஆறு பெண்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு தனது வீட்டில் விருந்தும் அளித்து மகிழ்ந்துள்ளார் இந்த ஆசிரியை.
இன்னமும் அந்த நட்பும் சந்திப்பும் தொடருகின்றது. குறைந்த பட்சம் வாரம் ஒரு தடவையாவது இவர்கள் குழந்தைகள் சகிதம் சந்தித்துக் கொள்கின்றனர்.
குழந்தைகளோடு கூட்டமாக பார்க் செல்கிறார்கள் அல்லது எங்காவது சிற்றுண்டி அருந்தச் செல்கிறார்கள். குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை கூட்டாகக் கொண்டாடவும் இந்தத் தாய்மார் திட்டமிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment