ஆண்களைப் பொறுத்தமட்டில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளில் அவர்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்படுகின்றது.
ஆனால் பெண்களுக்கோ இதற்கு முற்றிலும் மாறாக திருமண வாழ்வே கசந்து விடுகின்றது. 88 திருமணமான ஜோடிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு ஜோடி 36 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடியாகும். இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 70 வித்தியாசமான சலிப்பான பதில்களே கிடைத்துள்ளன.
பொதுவாக இந்தத் திருமண வாழ்வு போரடிப்பதாகவே பதில் கிடைத்துள்ளது. வினோதம் இல்லை, தொடர்பாடலும் குறைந்துவிட்டது, காமம் கூட குறைந்து விட்டது என்பது தான் இவர்களின் பதிலாக இருந்தது.
சிலர் தங்களது வாழ்க்கைத் துணையின் நிழலில் இருக்க வேண்டியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர். தங்களைச் சுற்றி ஒரு காலத்தில் வட்டமிட்ட பட்டாம் பூச்சியைக் கூட இப்போது காணவில்லை என்று சிலர் வருத்தம் தெரிவித்தனர்.
கனடா வினிபெக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பெவர்லிபெஹ்ர் என்பவர்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். முரண்பாடுகள்,துரோகம்,சுயநலம் என்பன தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment