39 வயதான இவர் கடந்த 20 வருடங்களாக பிரிட்டனின் வனவாழ் உயிரினங்களைப் படம் பிடித்து வருகின்றார்.
இவர் பறவைகள் தமது சொந்த விம்பத்தை தண்ணீரில் பார்த்து மகிழும் அல்லது விளையாடும் காட்சிகளை படம் பிடிக்கும் திட்டத்தை ஜனவரியில் தொடங்கினார்.
மிகவும் சிரமப்பட்டு பொறுமையைக் கையாண்டே இந்தப் படங்களை எடுக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.
இந்தப் படங்களை எடுப்பதற்காக இவர் குளம் ஒன்றை தனது தோட்டத்தில் உருவாக்கி அதில் பறவைகள் வந்து நிற்கக் கூடியவாறு மரக் கிளைகளையும் மற்ற வசதிகளையும் ஏற்படுத்தினார்.
அவர் பட்ட கஷ்டத்துக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. எதிர்ப்பார்த்தது போலவே தத்ரூபமான காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார்.
No comments:
Post a Comment