Tuesday, 26 April 2011

இளவரசர் திருமணம்: பரிசை நன்கொடையாக அளிக்க தனி இணையதளம் உருவாக்கம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
திருமண பரிசை அளிக்க விரும்பும் நபர்கள் தாங்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் இளவரசர் வில்லியம்.
நிலநடுக்கத்தால் பாதித்தவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கான சங்கம், வனவிலங்கு பாதுகாப்பு என 26 அறக்கட்டளைகளை வில்லியம் மற்றும் அவரது சகோதரர் ஹேரி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
திருமண பரிசை அளிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு பிடித்த அறக்கட்டளையை ஒன்றை தெரிவு செய்து அதற்கு நன்கொடை அளிக்கலாம். இதற்கென தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் யூரோ, டொலர், பவுண்ட் போன்ற நாணயங்களில் நன்கொடை அளிக்கலாம்.

No comments:

Post a Comment