மெய் சிலிர்க்க வைக்கும் இந்தக் காட்சியை இம்முறை ஈஸ்டர் வங்கி விடுமுறைத் தினத்தன்று காணும் துரதிஷ்டம் பலருக்கு ஏற்பட்டது.
கென்ட் கவுண்டியில் உள்ள ஒரு திறந்த வெளி மைதானத்தில் தான் இந்த விபத்து இடம்பெற்றது. விடுமுறையை முன்னிட்டு ஒரு திகில் காட்சி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த திகில் காட்சியில் பங்கேற்கும் ஸ்டன்ட் கலைஞர் பீரங்கிக்குள் இருந்து ஏவப்படுவது தான் விளையாட்டு. இவர் பீரங்கியிலிருந்து ஐம்பது அடி உயரத்துக்கு ஆகாயத்தை நோக்கி ஏவப்படுவார். எல்லாம் தயார் நிலையில் இருந்தது.
நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். மேலே சென்று தன்னை பீரங்கியோடு இணைத்துக் கொண்டு எல்லாம் சரி சுட்டுத் தள்ளுங்கள் என்ற தோரணையில் அவரும் சைகை கொடுத்தார்.
ஆனால் அவரின் பிரதான பாதுகாப்பு இணைப்புக் கேபிள் அறுந்திருந்ததை துரதிஷ்டவசமாக எவரும் கவனிக்கவில்லை. பிறகு என்ன கேபிளை நம்பி ஏவப்பட்டவர் மேலே போன வேகத்தில் தலைகுப்புற வந்து கீழே விழுந்தார்.
எல்லாம் கண்மூடி திறப்பதற்குள் முடிந்து விட்டது. தயார் நிலையில் இருந்த முதல் உதவிப் பிரிவினர் அவரை நோக்கி ஓடினர். அவசர சேவையும் உடனடியாக வந்துவிட்டது.
விமான அம்புலன்ஸ் உடனடியாக ஸதலத்துக்கு விரைந்து அவரை ஆஸபத்திரிக்கு எடுத்துச் சென்றது. இருந்தும் பலனில்லை.
தலைகுப்புற வந்து விழுந்ததால் மோசமாக அடிபட்டிருந்தது. சற்று நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. 23 வயதான மெட் என்ற ஸ்டன்ட் கலைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிர் இழந்தார்.
No comments:
Post a Comment