Thursday, 21 April 2011

50 வயது பெண்ணின் திருட்டு தந்திரம்

இறுதிச்சடங்கு வீடுகளில் உறவினர்கள் இறந்து போன நபருக்கான கிரியைகளை மேற்கொள்ளும் போது அங்கு ஊடுருவி பொருட்களை திருடும் 50 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
இந்தப் பெண் வடமேற்கு ஜேர்மனி நகரமான முன்ஸ்டரைச் சேர்ந்தவர் ஆவார். குறிப்பிட்ட நபரின் மரண அறிவித்தல் செய்தி நாளிதழ்களில் வெளியாவதைக் கவனித்து அந்த பெண் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து பொருட்களை திருடியதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த நவீன திருட்டுக்களை இந்தப் பெண் மேற்கொண்டு இருப்பது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஜான் ஷா பேக்கர் கூறுகையில்,"மரண அறிவித்தல் செய்தியைத் தரும் நபர்கள் இறந்தவருடைய முழு முகவரியை தருவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
இறுதிச்சடங்கு நடைபெறும் வீடுகளில் நம்பிக்கையான ஒருவர் வீட்டை கண்காணிக்க வேண்டும். குடும்பத்தினர் இறந்தவரின் இறுதிச்சடங்கு நடத்த வெளியேச் செல்லும் போது பூட்டப்பட்ட வீட்டில் அதிக அளவு பணம், நகைகளை பார்வையில் படும்படி வைக்கக்கூடாது. 
மிகப் பத்திரமாக பூட்டி வைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பான வெளியிடத்தில் வைக்க வேண்டும் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment